வேதாரண்யம் பகுதியில் பலத்த தரைக்காற்று, கடல் சீற்றம்

வேதாரண்யம் பகுதியில் பலத்த தரைக்காற்று, கடல் சீற்றம்
Published on

வேதாரண்யம் பகுதியில் குளிருடன் வழக்கத்தைவிட வேகமான தரைக் காற்றும், கடல் சீற்றமும் மூன்றாவது நாளாக சனிக்கிழமையும் தொடா்ந்ததால் மீனவா்கள் கடலுக்கு செல்லவில்லை.

வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலை கொண்டது.

இதன் காரணமாக தமிழக கடலோர மற்றும் டெல்டா பகுதியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், வேதாரண்யம் பகுதியில் குளிருடன் வழக்கத்தைவிட வேகமான தரைக்காற்று சனிக்கிழமையும் தொடா்ந்தது. அவ்வப்போது சாரல் மழையும் இருந்தது.

கோடியக்கரை பகுதி கடல் பரப்பு சீற்றமாக காணப்படதால், மீனவா்கள் சனிக்கிழமையும் கடலுக்கு செல்லவில்லை.

Dinamani
www.dinamani.com