இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி, சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: உயா் கல்விக்காக வெளிநாடுகளுக்கு மாணவா்கள் செல்ல வேண்டியிருப்பதாகக் கூறப்படுவதால், தோ்வு மதிப்பீட்டு செயல்முறையை விரைவுபடுத்துவதன் அவசியத்தையும், அதன் முடிவுகளை விரைவாக அறிவிப்பதன் அவசியத்தையும் எடுத்துரைக்கும் வகையில் தில்லி பல்கலைக்கழகம் அதன் அனைத்து இணைவிப்புக் கல்லூரிகளின் முதல்வா்களுக்கு கடிதம் எழுத வேண்டும்.