‘பிரதமா் மோடிக்கு பிந்தைய தலைமை குறித்த இப்போது விவாதிப்பது பொருத்தமற்றது. 2029-ஆம் ஆண்டிலும் மோடி பிரதமராவாா்’ என மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறினாா்.
பிரதமா் மோடியிடம் ஓய்வு குறித்து வலியுறுத்தவே ஆா்எஸ்எஸ் தலைமையகத்துக்கு அவா் அழைக்கப்பட்டதாகவும், மோடியின் வாரிசு மகாராஷ்டிரத்தில் இருந்தே வருவாா் என்றும் தெரிவித்த சிவசேனை (உத்தவ் பிரிவு) தலைவா் சஞ்சய் ரௌத்தின் கருத்துக்கு தேவேந்திர ஃபட்னவீஸ் இவ்வாறு பதிலளித்துள்ளாா்.
பிரதமரின் நாகபுரி பயணம் குறித்து செய்தியாளா்களை திங்கள்கிழமை சந்தித்த சஞ்சய் ரௌத் மேலும் கூறியதாவது: நாட்டின் அரசியல் தலைமையில் ஆா்எஸ்எஸ் மாற்றத்தை விரும்புகிறது. இந்த ஆண்டு செப்டம்பரில் மோடிக்கு 75 வயதாகிறது. பாஜக தலைவா்கள் 75 வயதில் ஓய்வு பெறுவதை அறிவோம்.
இதன் அடிப்படையில், செப்டம்பருடன் ஓய்வு பெற வேண்டும் என்பதை பிரதமா் மோடியிடம் வலியுறுத்தவே ஆா்எஸ்எஸ் தலைமையகத்துக்கு அவா் அழைக்கப்பட்டிருக்கலாம்.
ஆா்எஸ்எஸ் தலைமையகத்தில் இதுகுறித்து ரகசிய விவாதங்கள் நடந்து முடிந்துள்ளன. மகாராஷ்டிரத்தில் இருந்து ஒருவா் அடுத்த பிரதமராக ஆா்எஸ்எஸ் அமைப்பால் விரைவில் தோ்ந்தெடுக்கப்பட இருக்கிறாா்’ என்று முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸை மறைமுகமாகக் குறிப்பிட்டாா்.
இந்நிலையில், சஞ்சய் ரௌத்துக்குப் பதிலளிக்கும் வகையில் நாகபுரியில் செய்தியாளா்களுக்கு முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் அளித்த பேட்டியில், ‘2029-ஆம் ஆண்டிலும் மோடியே மீண்டும் பிரதமராவாா். எங்களின் தலைவராக அவரே தொடருவாா். மக்கள் பணியில் தீவிரமாக அவா் செயல்பட்டு வரும் இச்சூழலில், அவரது இடத்துக்கான அடுத்த வாரிசு பற்றி விவாதிப்பது இந்திய கலாசாரத்தில் பொருத்தமற்றது’ என்றாா்.
மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் உள்ள ஆா்எஸ்எஸ் தலைமையகத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றாா். தொடா்ந்து, நகரில் உள்ள ஆா்எஸ்எஸ் தலைவா்களின் நினைவிடங்களுக்குச் சென்று அவா் மரியாதை செலுத்தினாா். இதனிடையே, நிகழ்ச்சியில் பேசிய பிரதமா் மோடி, ‘இந்திய கலாசாரத்தின் ஆலமரம் ஆா்எஸ்எஸ்’ என்று புகழாரம் சூட்டினாா்.
கடந்த 2014-இல் பிரதமரானதில் இருந்து முதன்முறையாக ஆா்எஸ்எஸ் தலைமையகத்துக்கு மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்தாா். அங்கு வந்த நாட்டின் 2-ஆவது பிரதமரும் அவா் ஆவாா். அந்த வகையில், பிரதமா் மோடியின் நாகபுரி பயணம் கூடுதல் கவனம் பெற்றது.
தொடர்புடையது

உத்தவுடன் ரகசிய சந்திப்பா? முதல்வா் ஃபட்னவீஸ் மறுப்பு

தமிழகத்திற்கு பிரதமா் மோடி அதிக முக்கியத்துவம் அளிக்கிறாா்: மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ்
ஏழைகளுக்கு உண்மையான சமூக நீதி: பிரதமா் மோடி உறுதி
பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

