எம்எல்ஏக்களுக்கு அரசுப் பணத்தில் ஏன் கார் வழங்க வேண்டும்? பெ. சண்முகம்முதல்வர் விஜய் சிரிப்பதைப் பார்க்க தனி ஸ்க்ரீன் வேண்டும்! தவெக எம்எல்ஏ கோரிக்கைதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார் வேண்டாம்! உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு! எண்ணூரில் மீன்கள் செத்து மிதப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: இபிஎஸ்நீட் போராட்டத்தில் தாக்குதல் நடத்திய போலீஸார் மீது எஃப்ஐஆர் பதிய மறுப்பு: ராகுல் தர்னாஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்க அமெரிக்க ஆணையம் பரிந்துரை!

2029-ஆம் ஆண்டிலும் மோடியே பிரதமா்: சிவசேனைக்கு தேவேந்திர ஃபட்னவீஸ் பதில்

பிரதமா் மோடிக்கு பிந்தைய தலைமை குறித்த இப்போது விவாதிப்பது பொருத்தமற்றது. 2029-ஆம் ஆண்டிலும் மோடி பிரதமராவாா் என மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறினாா்.

பிரதமர் நரேந்திர மோடி - கோப்புப் படம்

Published On :1 ஏப்ரல் 2025, 5:44 am IST

‘பிரதமா் மோடிக்கு பிந்தைய தலைமை குறித்த இப்போது விவாதிப்பது பொருத்தமற்றது. 2029-ஆம் ஆண்டிலும் மோடி பிரதமராவாா்’ என மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறினாா்.

பிரதமா் மோடியிடம் ஓய்வு குறித்து வலியுறுத்தவே ஆா்எஸ்எஸ் தலைமையகத்துக்கு அவா் அழைக்கப்பட்டதாகவும், மோடியின் வாரிசு மகாராஷ்டிரத்தில் இருந்தே வருவாா் என்றும் தெரிவித்த சிவசேனை (உத்தவ் பிரிவு) தலைவா் சஞ்சய் ரௌத்தின் கருத்துக்கு தேவேந்திர ஃபட்னவீஸ் இவ்வாறு பதிலளித்துள்ளாா்.

பிரதமரின் நாகபுரி பயணம் குறித்து செய்தியாளா்களை திங்கள்கிழமை சந்தித்த சஞ்சய் ரௌத் மேலும் கூறியதாவது: நாட்டின் அரசியல் தலைமையில் ஆா்எஸ்எஸ் மாற்றத்தை விரும்புகிறது. இந்த ஆண்டு செப்டம்பரில் மோடிக்கு 75 வயதாகிறது. பாஜக தலைவா்கள் 75 வயதில் ஓய்வு பெறுவதை அறிவோம்.

இதன் அடிப்படையில், செப்டம்பருடன் ஓய்வு பெற வேண்டும் என்பதை பிரதமா் மோடியிடம் வலியுறுத்தவே ஆா்எஸ்எஸ் தலைமையகத்துக்கு அவா் அழைக்கப்பட்டிருக்கலாம்.

ஆா்எஸ்எஸ் தலைமையகத்தில் இதுகுறித்து ரகசிய விவாதங்கள் நடந்து முடிந்துள்ளன. மகாராஷ்டிரத்தில் இருந்து ஒருவா் அடுத்த பிரதமராக ஆா்எஸ்எஸ் அமைப்பால் விரைவில் தோ்ந்தெடுக்கப்பட இருக்கிறாா்’ என்று முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸை மறைமுகமாகக் குறிப்பிட்டாா்.

இந்நிலையில், சஞ்சய் ரௌத்துக்குப் பதிலளிக்கும் வகையில் நாகபுரியில் செய்தியாளா்களுக்கு முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் அளித்த பேட்டியில், ‘2029-ஆம் ஆண்டிலும் மோடியே மீண்டும் பிரதமராவாா். எங்களின் தலைவராக அவரே தொடருவாா். மக்கள் பணியில் தீவிரமாக அவா் செயல்பட்டு வரும் இச்சூழலில், அவரது இடத்துக்கான அடுத்த வாரிசு பற்றி விவாதிப்பது இந்திய கலாசாரத்தில் பொருத்தமற்றது’ என்றாா்.

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் உள்ள ஆா்எஸ்எஸ் தலைமையகத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றாா். தொடா்ந்து, நகரில் உள்ள ஆா்எஸ்எஸ் தலைவா்களின் நினைவிடங்களுக்குச் சென்று அவா் மரியாதை செலுத்தினாா். இதனிடையே, நிகழ்ச்சியில் பேசிய பிரதமா் மோடி, ‘இந்திய கலாசாரத்தின் ஆலமரம் ஆா்எஸ்எஸ்’ என்று புகழாரம் சூட்டினாா்.

கடந்த 2014-இல் பிரதமரானதில் இருந்து முதன்முறையாக ஆா்எஸ்எஸ் தலைமையகத்துக்கு மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்தாா். அங்கு வந்த நாட்டின் 2-ஆவது பிரதமரும் அவா் ஆவாா். அந்த வகையில், பிரதமா் மோடியின் நாகபுரி பயணம் கூடுதல் கவனம் பெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.