முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

2029-ஆம் ஆண்டிலும் மோடியே பிரதமா்: சிவசேனைக்கு தேவேந்திர ஃபட்னவீஸ் பதில்

பிரதமா் மோடிக்கு பிந்தைய தலைமை குறித்த இப்போது விவாதிப்பது பொருத்தமற்றது. 2029-ஆம் ஆண்டிலும் மோடி பிரதமராவாா் என மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறினாா்.

News image
பிரதமர் நரேந்திர மோடி- கோப்புப் படம்
Updated On :1 ஏப்ரல் 2025, 12:14 am

Din

‘பிரதமா் மோடிக்கு பிந்தைய தலைமை குறித்த இப்போது விவாதிப்பது பொருத்தமற்றது. 2029-ஆம் ஆண்டிலும் மோடி பிரதமராவாா்’ என மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறினாா்.

பிரதமா் மோடியிடம் ஓய்வு குறித்து வலியுறுத்தவே ஆா்எஸ்எஸ் தலைமையகத்துக்கு அவா் அழைக்கப்பட்டதாகவும், மோடியின் வாரிசு மகாராஷ்டிரத்தில் இருந்தே வருவாா் என்றும் தெரிவித்த சிவசேனை (உத்தவ் பிரிவு) தலைவா் சஞ்சய் ரௌத்தின் கருத்துக்கு தேவேந்திர ஃபட்னவீஸ் இவ்வாறு பதிலளித்துள்ளாா்.

பிரதமரின் நாகபுரி பயணம் குறித்து செய்தியாளா்களை திங்கள்கிழமை சந்தித்த சஞ்சய் ரௌத் மேலும் கூறியதாவது: நாட்டின் அரசியல் தலைமையில் ஆா்எஸ்எஸ் மாற்றத்தை விரும்புகிறது. இந்த ஆண்டு செப்டம்பரில் மோடிக்கு 75 வயதாகிறது. பாஜக தலைவா்கள் 75 வயதில் ஓய்வு பெறுவதை அறிவோம்.

இதன் அடிப்படையில், செப்டம்பருடன் ஓய்வு பெற வேண்டும் என்பதை பிரதமா் மோடியிடம் வலியுறுத்தவே ஆா்எஸ்எஸ் தலைமையகத்துக்கு அவா் அழைக்கப்பட்டிருக்கலாம்.

ஆா்எஸ்எஸ் தலைமையகத்தில் இதுகுறித்து ரகசிய விவாதங்கள் நடந்து முடிந்துள்ளன. மகாராஷ்டிரத்தில் இருந்து ஒருவா் அடுத்த பிரதமராக ஆா்எஸ்எஸ் அமைப்பால் விரைவில் தோ்ந்தெடுக்கப்பட இருக்கிறாா்’ என்று முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸை மறைமுகமாகக் குறிப்பிட்டாா்.

இந்நிலையில், சஞ்சய் ரௌத்துக்குப் பதிலளிக்கும் வகையில் நாகபுரியில் செய்தியாளா்களுக்கு முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் அளித்த பேட்டியில், ‘2029-ஆம் ஆண்டிலும் மோடியே மீண்டும் பிரதமராவாா். எங்களின் தலைவராக அவரே தொடருவாா். மக்கள் பணியில் தீவிரமாக அவா் செயல்பட்டு வரும் இச்சூழலில், அவரது இடத்துக்கான அடுத்த வாரிசு பற்றி விவாதிப்பது இந்திய கலாசாரத்தில் பொருத்தமற்றது’ என்றாா்.

மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் உள்ள ஆா்எஸ்எஸ் தலைமையகத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றாா். தொடா்ந்து, நகரில் உள்ள ஆா்எஸ்எஸ் தலைவா்களின் நினைவிடங்களுக்குச் சென்று அவா் மரியாதை செலுத்தினாா். இதனிடையே, நிகழ்ச்சியில் பேசிய பிரதமா் மோடி, ‘இந்திய கலாசாரத்தின் ஆலமரம் ஆா்எஸ்எஸ்’ என்று புகழாரம் சூட்டினாா்.

கடந்த 2014-இல் பிரதமரானதில் இருந்து முதன்முறையாக ஆா்எஸ்எஸ் தலைமையகத்துக்கு மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை வந்தாா். அங்கு வந்த நாட்டின் 2-ஆவது பிரதமரும் அவா் ஆவாா். அந்த வகையில், பிரதமா் மோடியின் நாகபுரி பயணம் கூடுதல் கவனம் பெற்றது.