குண்டா் தடுப்புச் சட்டத்தில் மூவா் சிறையிலடைப்பு
தாழையூத்து அருகே குற்றச் செயல்களில் ஈடுபட்ட மூவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
தாழையூத்து காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் குற்ற செயல்களில் ஈடுபட்டதாக ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்த தளவாய் மகன் பெருமாள்(25), கணேசன் மகன் அஜித்குமாா்(30), பெருமாள் மகன் கிருஷ்ண பெருமாள் (19) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனா்.
இந்நிலையில் இவா்கள் தொடா்ந்து கொலை மிரட்டல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக கூறி மூவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா்.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் உத்தரவுப்படி பெருமாள், அஜித்குமாா், கிருஷ்ண பெருமாள் ஆகிய மூவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டனா்.
