திக்குறிச்சி மகாதேவர் கோயிலில் நடைபெற்ற ஐம்பொன் சிலை திருட்டு தொடர்பான வழக்கை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றக் கோரி பாகோடு மண்டல பாஜக சார்பில் திக்குறிச்சி வள்ளக்கடவு சந்திப்பில் வியாழக்கிழமை தர்னா போராட்டம் நடைபெற்றது.
மண்டல பாஜக தலைவர் பாபு தலைமை வகித்தார். மண்டல பொதுச் செயலர் ஜெ. ரமேஷ், மாவட்ட ஐ.டி. பிரிவு செயலர் அருள்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் என். சுகுமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாவட்டச் செயலர் எஸ். முத்துகிருஷ்ணன், மாநில துணைத் தலைவர் எம்.ஆர். காந்தி, கோட்ட பொறுப்பாளர் சி. தர்மராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் ஆர். ஜெயசீலன் உள்ளிட்டோர் பேசினர்.
இதில், மாவட்டச் செயலர் கே.எஸ். முருகன், களியக்காவிளை மண்டலத் தலைவர் சரவணவாஸ் நாராயணன், சுரேஷ் சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரக்ஷன் நாயகனாக நடிக்கும் மேரி கோல்ட்! படப்பிடிப்பு தொடக்கம்!

சென்னை எழும்பூர் - சேலம் ரயில் சேவையில் இன்று மாற்றம்! நாளை காலை புறப்படும்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தோல்விக்கு காரணம் ராகுல் காந்தி: பாஜக

”5 மாதங்களுக்கு முன்னால் எடுத்த விடியோ அது!” வைரல் விடியோவுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்!
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day


