கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கோவளம் வர்த்தக துறைமுகம் குறித்து பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம்

கோவளம் - மணக்குடி இடையே வர்த்தக துறைமுகம் அமைப்பது தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்து, சந்தேகங்களுக்கு விளக்கம்

News image
Updated On :19 ஜனவரி 2018, 7:47 pm

DIN

கோவளம் - மணக்குடி இடையே வர்த்தக துறைமுகம் அமைப்பது தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்து, சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பது தொடர்பான கூட்டம்  நடைபெற்று வருகிறது என்றார் மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா.சவாண்.
  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில், அகஸ்தீசுவரம் வட்டம், கோவளம் - மணக்குடி கிராமங்களுக்கு இடையே வர்த்தக சரக்கு பெட்டக துறைமுகம் அமைக்க உத்தேசிக்கப்பட்ட இடத்திலும் அதனை சுற்றியுள்ள குக்கிராமங்களில் துறைமுகத்தின் அவசியம் குறித்தும், அதன் பயன்பாடுகள் குறித்தும், வர்த்தக துறைமுகம் அமைப்பது தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறியவும், சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கவும், கன்னியாகுமரி மற்றும் கோவளம், அகஸ்தீசுவரம், தெற்குதாமரைகுளம், வடக்கு தாமரைகுளம் ஆகிய பகுதிகளில் 9 குழுக்களாக நேரடியாக சென்று வர்த்தக துறைமுகம் அமைப்பது தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களையும், சந்தேகங்களையும் கேட்க உள்ளனர்.
இக்குழுவில்,  தூத்துக்குடி,  வ.உ.சி.துறைமுகம், சர்வதேச சரக்கு பெட்டக துறைமுக சிறப்பு அதிகாரி   விஷ்ணு,  ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ராகுல்நாத், பத்மநாபபுரம்  வருவாய் கோட்டாட்சியர் சுங்கரா  மற்றும் மீன்வளத்துறை, உதவி இயக்குநர், மண்டல துணை வட்டாட்சியர், அகஸ்தீசுவரம், வருவாய் ஆய்வாளர், கன்னியாகுமரி, கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 
  இக்குழுவினர்  ஜன.18   ஆம்  தேதி கோயில்விளை, கிண்ணிகண்ணன்விளை, இலந்தையடிவிளை அரசு உயர்நிலைப்பள்ளியிலும், ஜன.19   ஆம் தேதி  முகிலன்குடியிருப்பு, கோம்பவிளை, இலந்தையடிவிளை அரசு உயர்நிலைப்பள்ளியிலும், துறைமுகம் அமைப்பது தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களையும், சந்தேகங்களையும் கேட்டறிந்தனர்  என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.