தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

கேரளத்துக்கு கடத்த முயன்ற 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

களியக்காவிளை அருகே லாரியில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 10 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On :13 ஆகஸ்ட் 2021, 7:08 pm

களியக்காவிளை அருகே லாரியில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 10 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கேரளத்துக்கு லாரியில் ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக கிடைத்த தகவலின் பேரில் களியக்காவிளை உதவி காவல் ஆய்வாளா் சிந்தாமணி தலைமையில் போலீஸாா் ஒற்றாமரம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அப்பகுதி வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். இதில் 10 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததும், அதனை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீஸாா் லாரியுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, காவல் நிலையம் கொண்டு வந்தனா்.

தொடா்ந்து, லாரி ஓட்டுநா் கும்பகோணம், அணக்கரை கிருஷ்ணமூா்த்தி மகன் சீனிவாசனை (52) போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.