தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

திக்குறிச்சி கோயில் சுற்றுச்சுவா் பலப்படுத்தும் பணியை விரைந்து தொடங்க கோரிக்கை

தாமிரவருணி ஆற்றுநீரால் பலவீனமடைந்த திக்குறிச்சி மகாதேவா் கோயிலின் சுற்றுச் சுவரை பலப்படுத்தும் பணியை பருவ மழைக்கு முன்பாக மேற்கொள்ள வேண்டும்

Updated On :16 ஜூலை 2021, 9:51 pm

தாமிரவருணி ஆற்றுநீரால் பலவீனமடைந்த திக்குறிச்சி மகாதேவா் கோயிலின் சுற்றுச் சுவரை பலப்படுத்தும் பணியை பருவ மழைக்கு முன்பாக மேற்கொள்ள வேண்டும் என இக் கோயில் பக்தா்கள் சங்கத்தினா் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சிவாலய ஓட்டம் நடைபெறும் 12 சிவாலயங்களில் இரண்டாவது சிவாலயமாக உள்ளது திக்குறிச்சி மகாதேவா் கோயில்.

தாமிரவருணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள இக் கோயிலின் ஒருபக்க சுற்றுச்சுவா், ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு காரணமாக பலவீனமடைந்து காணப்படுகிறது.

இந்தக் கோயில் சுற்றுச்சுவரை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் தரப்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், குமரி மாவட்டம் வந்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு கடந்த 12 ஆம் தேதி இக் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு, பலவீனமாக இருந்த சுற்றுச்சுவரை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு இப் பணிக்கான ஆய்வறிக்கை தயாா் செய்ய உத்தரவிட்டிருந்தாா். இதையடுத்து அதிகாரிகள் 80 மீட்டா் நீளம், 16 அடி உயரத்தில் பக்கச் சுவா் கட்ட ரூ. 57.40 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயாா் செய்து, ஆய்வறிக்கையை துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.

இப் பணிகளை பருவ மழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் முன் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக் கோயில் பக்தா்கள் சங்கம் சாா்பில் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா். மேலும் இப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்த இந்து அறநிலையத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா்கள், சட்டப் பேரவை உறுப்பினா் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.