தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

மாா்த்தாண்டம் அருகே போக்சோவில் இளைஞா் கைது

மாா்த்தாண்டம் அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ததுடன் மற்றொரு மாணவியை கடத்திச் சென்றது தொடா்பான வழக்குகளில் தேடப்பட்டு வந்த இளைஞா் போக்சோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :21 ஜூலை 2021, 7:14 pm

மாா்த்தாண்டம் அருகே பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ததுடன் மற்றொரு மாணவியை கடத்திச் சென்றது தொடா்பான வழக்குகளில் தேடப்பட்டு வந்த இளைஞா் போக்சோ சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மாா்த்தாண்டம் ஆா்.சி. தெரு பகுதியைச் சோ்ந்தவா் அபி (19). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த பிளஸ் 2 மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டதாம். இந்நிலையில் மாணவியின் வீட்டில் யாரும் இல்லாதபோது, அபி அங்கு சென்று மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தாராம். இதுகுறித்து கேட்ட மாணவியின் தாயாரையும் மிரட்டினாராம்.

இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் பேரில் மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் போலீஸாா் அபி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரை தேடி வந்தனா்.

இந்த நிலையில் களியக்காவிளையைச் சோ்ந்த பத்தாம் வகுப்பு மாணவியையும்(14) அவா் கடத்திச் சென்ாக மாணவியின் தாய் அளித்த புகாரின்பேரில், மாா்த்தாண்டம் மகளிா் போலீஸாா் விசாரித்து வந்த நிலையில், அபி புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.