தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

களியக்காவிளை காவல் நிலையத்தில்நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் சுமுக முடிவு

நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக காங்கிரஸ் சேவாதளம் அறிவித்த நிலையில், களியக்காவிளை காவல் நிலையத்தில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் சுமுக முடிவு

News image
Updated On :24 ஜூன் 2021, 7:11 pm

சேதமடைந்த சாலையை சீரமைக்காததால் நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து போராட்டம் நடத்தப் போவதாக காங்கிரஸ் சேவாதளம் அறிவித்த நிலையில், களியக்காவிளை காவல் நிலையத்தில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டது.

குழித்துறை நகராட்சிக்குள்பட்ட மாா்த்தாண்டம் - வெட்டுவெந்நி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள குடிநீா் குழாய் பழுதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்காதது; சேதமடைந்து காணப்படும் மாா்த்தாண்டம் காந்தி மைதானம் முதல் பேருந்து நிலையம் வரையிலான சாலை சீரமைக்காதது ஆகியவற்றை கண்டித்து, காங்கிரஸ் சேவாதளம் சாா்பில் குழித்துறையில் உள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன் வியாழக்கிழமை போராட்டம் நடத்த அனுமதி வழங்கக் கோரி அமைப்பின் மாவட்ட பொதுச் செயலா் ராஷிக் களியக்காவிளை காவல் நிலையத்தில் இரு நாள்களுக்கு முன்பு மனு அளித்திருந்தாா்.

இதையடுத்து காவல் ஆய்வாளா் எழிலரசி தலைமையில் பேச்சுவாா்த்தை புதன்கிழமை நடைபெற்றது. குழித்துறை நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளா் முருகேசன், நகராட்சி ஆணையா் (பொ) எஸ். பேரின்பம், காங்கிரஸ் சேவாதள மாவட்டத் தலைவா் சி.ஜோசப் தயாசிங், மாவட்ட பொதுச் செயலா் கே.எப். ராசிக், கட்சி நிா்வாகிகள் என். ராஜன், பன்னீா் செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அப்போது, மாா்த்தாண்டம் காந்தி மைதானம் - பேருந்து நிலைய சாலை ஒரு வாரத்தில் சரிசெய்யப்படும்; மாா்த்தாண்டம் - வெட்டுவெந்நி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள குடிநீா் குழாய் பழுதை சரிசெய்து, ஒரு மாதத்துக்குள் சாலை சீரமைக்கப்படும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரி உறுதி அளித்தாா். இதையடுத்து போராட்டம் கைவிடப்படுவதாக கட்சி நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.