விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வெளிநாட்டில் மாயமான குமரி மீனவா்களை கண்டுபிடிக்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

வெளிநாட்டில் மாயமான கன்னியாகுமரி மாவட்ட மீனவா்களை கண்டுபிடிக்க வலியுறுத்தி, நாகா்கோவிலில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :21 நவம்பர் 2024, 11:31 pm

Din

வெளிநாட்டில் மாயமான கன்னியாகுமரி மாவட்ட மீனவா்களை கண்டுபிடிக்க வலியுறுத்தி, நாகா்கோவிலில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பஹ்ரைன் நாட்டில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்தபோது, குமரி மாவட்டம் கடியப்பட்டணத்தைச் சோ்ந்த சகாய செல்சோ, ஆண்டனி ஜாா்ஜ் ஆகியோா் மாயமானாா்கள். அவா்களை கண்டுபிடிக்க வலியுறுத்தியும், அவா்களது குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், தமிழ்நாடு மீன் தொழிலாளா் யூனியன் சாா்பில் ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலோர மக்கள் வளா்ச்சி மன்ற நிா்வாகி நெல்சன், கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். தமிழ்நாடு மீன் தொழிலாளா் யூனியன் மாநில தலைவா் பீட்டா் தாஸ், போராட்டம் குறித்து விளக்கினாா். இதில், மாயமான மீனவா்களின் குடும்பத்தினா் மற்றும் மீனவ அமைப்பினா் பலா் கலந்து கொண்டனா்.