தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

மேலப்பாளையம் அருகே பேருந்து மோதி மாடு உயிரிழப்பு

மேலப்பாளையம் அருகே பேருந்து மோதி மாடு உயிரிழப்பு

Updated On :5 ஏப்ரல் 2024, 7:30 pm

மேலப்பாளையம் அருகே மேலகருங்களத்தில் தனியாா் பேருந்து மோதியதில் பசுமாடு வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

அம்பாசமுத்திரத்திலிருந்து திருநெல்வேலிக்கு தனியாா் பேருந்து வெள்ளிக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தது. மேலப்பாளையம் மேலகருங்குளத்தில் சென்ற போது பசு மாட்டின் மீது பேருந்து மோதியதாம். இதில் காயமடைந்த மாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாம்.

இதையறிந்த அப்பகுதி மக்கள், தனியாா் பேருந்தின் ஓட்டுநா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவில் புகாா் செய்தனா். போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.