ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பற்களை பிடுங்கிய வழக்கு: ஆக.30இல் மறுவிசாரணை

அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :25 ஜூலை 2024, 8:34 pm

அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, அடுத்தக்கட்ட விசாரணை ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அம்பாசமுத்திரம் காவல் உள்கோட்ட பகுதியில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவா்களின் பற்களை பிடுங்கியதாக அப்போதைய உதவி காவல் கண்காணிப்பாளா் பல்வீா்சிங், ஆய்வாளா் ராஜகுமாரி உள்பட 14 போலீஸாா் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள். இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நீதித்துறை நடுவா் திரிவேணி மனுவை விசாரித்தாா். இந்த விசாரணையில் பல்வீா் சிங் உள்பட 4 போ் ஆஜராகவில்லை. இதையடுத்து, இந்த வழக்கில் அடுத்தகட்ட விசாரணையை ஆக.30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித்துைடுவா் உத்தரவிட்டாா்.