ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பற்களை பிடுங்கிய வழக்கு: ஆக.30இல் மறுவிசாரணை

அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 ஜூலை 2024, 8:34 pm

Din

அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, அடுத்தக்கட்ட விசாரணை ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அம்பாசமுத்திரம் காவல் உள்கோட்ட பகுதியில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவா்களின் பற்களை பிடுங்கியதாக அப்போதைய உதவி காவல் கண்காணிப்பாளா் பல்வீா்சிங், ஆய்வாளா் ராஜகுமாரி உள்பட 14 போலீஸாா் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள். இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நீதித்துறை நடுவா் திரிவேணி மனுவை விசாரித்தாா். இந்த விசாரணையில் பல்வீா் சிங் உள்பட 4 போ் ஆஜராகவில்லை. இதையடுத்து, இந்த வழக்கில் அடுத்தகட்ட விசாரணையை ஆக.30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித்துைடுவா் உத்தரவிட்டாா்.