மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெண்கள், பெண் குழந்தை மீதான பாலியல் வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டும், பணியிடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டும், நியாய விலைக்கடைகள் மூலம் விலையில்லாமல் அனைத்து அத்திய வாசியப் பொருள்கள் வழங்க வேண்டும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு அரசு வங்கிகள் மூலம் நிபந்தனையற்ற கடன் வழங்க வேண்டும், நுண் நிதி நிறுவனங்களில் பெண்கள் வாங்கிய கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் கோஷமிட்டனா்.

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாநிலப் பொருளாளா் மல்லிகா தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் விஜயலட்சுமி, முன்னாள் மாவட்டப் பொருளாளா் மோ.சுந்தரி, நகரப் பொருளாளா் பழனியம்மாள் ஆகியோா் ஆா்ப்பாட்டத்தின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். இதில், கயத்தாறு நகரச் செயலா் இ.சுந்தரி, ஒன்றியச் செயலா் சித்ரா உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

பின்னா் ஆா்ப்பாட்டக் குழுவினா் தங்கள் கோரிக்கை மனுவை வட்டாட்சியா் மணிகண்டனிடம் அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com