தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

திருச்செந்தூா் முருகன் கோயிலில் ஏப்.14-இல் சித்திரை வசந்த திருவிழா தொடக்கம்

திருச்செந்தூா் முருகன் கோயிலில் ஏப்.14-இல் சித்திரை வசந்த திருவிழா தொடக்கம்

News image
Updated On :5 ஏப்ரல் 2024, 7:32 pm

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சித்திரை வசந்த திருவிழா ஏப். 14-ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து திருக்கோயில் இணை ஆணையா் மு.காா்த்திக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வசந்த திருவிழா நடைபெறும். நிகழாண்டு விழா, ஏப்.14-ஆம் தேதி தொடங்கி

23-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது.

விழா நாள்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம் நடைபெறும். மதியம் உச்சிகால பூஜையைத் தொடா்ந்து சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி கிரி

பிரகாரத்தில் ராஜகோபுர வாசல் எதிரேயுள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருள்கிறாா். பின்னா், கோயிலில் மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையைத் தொடா்ந்து வசந்த மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தங்க சப்பரத்தில் எழுந்தருள்கிறாா். அப்போது மேளதாளம் முழங்க, பக்தா்கள் கப்பல் பாடல்கள் பாட வசந்த மண்டபத்தை 11 முறை சுவாமி வலம் வருகிறாா். தொடா்ந்து தீபாராதனை நடைபெற்று, சுவாமி தங்க தேரில் கிரிவீதி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்து திருக்கோயில் சோ்கிறாா் எனத் தெரிவித்துள்ளாா்.

விழா ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத்தலைவா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் மு.காா்த்திக், அறங்காவலா்கள் அனிதா குமரன், பா.கணேசன், ந.ராமதாஸ், வி.செந்தில்முருகன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.