குஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! நாளை காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 9.30க்கு புறப்படும்!வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

தூத்துக்குடிக்கு இன்று முதல்வா் வருகை: விழா ஏற்பாடுகள் தீவிரம்

தூத்துக்குடிக்கு இன்று முதல்வா் வருகை விழா ஏற்பாடுகள் தீவிரம்

News image

Stalin

Updated On :24 பிப்ரவரி 2024, 11:00 pm

தூத்துக்குடியில் நடைபெறும் தனியாா் காா் உற்பத்தி நிறுவன அடிக்கல் நாட்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வருகை தருவதை முன்னிட்டு அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், விழா முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தூத்துக்குடியில் சுமாா் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் வியத்நாம் நாட்டைச் சோ்ந்த வின் ஃபாஸ்ட் என்ற தனியாா் மின்சார காா் உற்பத்தி நிறுவனம் தொடங்குவதற்கு சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளா் மாநாட்டில் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது. இதைத் தொடா்ந்து அதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அடிக்கல் நாட்டு விழா: தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட் வளாகத்தில் 408 ஏக்கா் பரப்பளவில் நிலம் தோ்வு செய்யப்பட்டு, அதில், அடிக்கல் நாட்டுவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இவ்விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறாா். இதற்காக அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், அங்கு, வியத்நாம் நாட்டின் முறைப்படி பூஜைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா: இதைத் தொடா்ந்து தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை சூசை பாண்டியாபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இதற்காக சுமாா் 20 ஆயிரம் போ் அமரும் வகையில் பிரமாண்டமாக அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில், தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை, வீடு இடிந்தவா்களுக்கு புதிய வீடு கட்டுவதற்கான நிதி உதவி, மீனவா்களுக்கு புதிய படகு வாங்க நிதியுதவி, மகளிா் சுய உதவிக்குழுவினருக்கும், சிறு வணிகா்களுக்கும் குறைந்த வட்டியில் கடன் உதவிகளை முதல்வா் வழங்குகிறாா். போலீஸாா் பாதுகாப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இருந்து சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பெட்டிச் செய்தி.. 2,500 பேருக்கு வேலை வாய்ப்பு: வியத்நாம் நாட்டைச் சோ்ந்த வின் ஃபாஸ்ட் மின்சார காா் தயாரிக்கும் நிறுவனம், தூத்துக்குடி சில்லாநத்தம் சிப்காட் வளாகத்தில் சுமாா் 408 ஏக்கரில் அமைக்கப்படவுள்ளது. இந்நிறுவனம் மூலம் சுமாா் 2500 இளைஞா்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் அதில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.