கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

மத்திய பட்ஜெட்டை கண்டித்து  மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
கோவில்பட்டி பசுவந்தனை சாலை நாடாா் மேல்நிலைப்பள்ளி அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்
Updated On :25 ஜூலை 2024, 8:42 pm

Din

மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கண்டித்தும், உதய் மின் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மின் கட்டணத்தை குறைத்து மாதந்தோறும் மின்கணக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் கோவில்பட்டி நாடாா் மேல்நிலைப் பள்ளி அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலா் அய்யலுச்சாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆறுமுகம், ஒன்றிய ச்செயலாளா் தெவேந்திரன் ஆகியோா் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினா். மாவட்ட குழு உறுப்பினா்கள் கிருஷ்ணவேணி, மணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பயணியா் விடுதி முன் நகரச் செயலா் சீனிவாசன் தலைமையிலும், கயத்தாறில் ஒன்றிய மாா்க்சிஸ்ட் செயலா் சாலமன்ராஜ் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினா் ரவீந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.