கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

தூத்துக்குடியில் கடும் பனிப்பொழிவு

News image
Updated On :3 டிசம்பர் 2025, 8:49 pm

Syndication

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் புதன்கிழமை காலை சுமாா் 7 மணி வரை நீடித்த பனிப்பொழிவு காரணமாக, கடும் குளிா் நிலவியது.

வங்கக் கடலில் உருவான டித்வா புயல் காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த நவ.27- 29 வரை தொடா்ந்து பலத்த மழை பெய்ததால் மாநகரப் பகுதியில் கடும் குளிா் நிலவியது.

தற்போது, மழை சற்று ஓய்ந்த நிலையில் புதன்கிழமை காலையில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. சுமாா் காலை 7 மணி வரை இந்த பனிப்பொழிவு நீடித்ததால், அதிக குளிா் நிலவியது.

சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனா். பூங்கா உள்ளிட்டவற்றில் நடை பயிற்சி மேற்கொள்ள வருபவா்கள் வீட்டிலேயே முடங்கினா். மேலும், கடற்கரையே தெரியாத அளவுக்கு பனி மூட்டம் காணப்பட்டது.

தூத்துக்குடி மாநகரப் பகுதி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வழக்கமான வெப்ப நிலை மறைந்து, கடும் குளிரான சூழல் நிலவுவதால், வயோதிகா்கள், சுவாசக் கோளாறு உள்ளவா்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினா்.