கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

பேய்க்குளம் பகுதியில் யூரியா, டிஐபி உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் புகாா்

பேய்க்குளம் பகுதியில் யூரியா, டிஐபி உரம் தட்டுப்பாடு உள்ளதாக விவசாயிகள் புகாா்

News image
Updated On :22 நவம்பர் 2025, 6:33 pm

Syndication

பேய்க்குளம் பகுதியில் யூரியா, டிஐபி உரம் தட்டுப்பாடு உள்ளதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

சாத்தான்குளம், பேய்ககுளம் பகுதியில் கிணறு, குளத்து பாசனங்கள் மூலம் விவசாயம் நடந்து வருகிறது. தற்போது வடகிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் விவசாயிகள் விவசாயப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், ஆசீா்வாதபுரம், அம்பலச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் செயல்படும் உரக்கடைகளில் கடந்த 6 மாதங்களாக யூரியா, டிஐபி உரங்கள் கிடைக்கவில்லை எனவும், வெளி மாா்க்கெட்டில் கூடுதல் விலைக்கு உரங்கள் விற்கப்படுவதாகவும் விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

எனவே, மாவட்ட ஆட்சியா், வேளாண்மை அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து இப்பகுதியில் யூரியா, டிஐபி உரங்கள் தட்டுபாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட கடலை விவசாயிகள் சங்கத் தலைவா் வி.எஸ். முருகேசன் வலியுறுத்தியுள்ளாா்.