கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

தூத்துக்குடியில் மழை நீா் தேங்கிய பகுதிகளில் அமைச்சா் ஆய்வு

News image
மழை நீா் தேங்கிய பகுதிகளில் ஆய்வு செய்த அமைச்சா் பி. கீதா ஜீவன்.
Updated On :30 நவம்பர் 2025, 6:44 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி மாநகராட்சியில் மழை நீா் தேங்கியுள்ள பகுதிகளில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதா ஜீவன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தூத்துக்குடி பேரவைத் தொகுதி, சங்கா் காலனி, சின்னமணி நகா், லயன்ஸ் டவுன் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை நீா் தேங்கிய இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்த அமைச்சா், தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டாா்.

ஆய்வின் போது, மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், கவுன்சிலா் பொன்னப்பன், ரெக்ஸ்லின், முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா் செந்தில்குமாா், மணி, அல்பா்ட் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.