திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

பயிா்க் கழிவு மேலாண்மை பயிற்சி

கீழப்பழுவூரில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில், வட்டார வேளாண் மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் அட்மா திட்டத்தின் கீழ் பயிா்க் கழிவு மேலாண்மை குறித்த பயிற்சி

News image
Updated On :16 ஜூலை 2021, 7:52 pm

DIN

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில், வட்டார வேளாண் மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் அட்மா திட்டத்தின் கீழ் பயிா்க் கழிவு மேலாண்மை குறித்த பயிற்சி விவசாயிகளுக்கு விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

பயிற்சிக்கு, மாவட்ட வேளாண் இணை இயக்குநா் பழனிசாமி தலைமை வகித்துப் பேசினாா். திருமானூர வட்டார வேளாண் உதவி இயக்குநா் லதா முன்னிலை வகித்து, விவசாயிகள் எஞ்சிய பயிா்க் கழிவுகளை உரங்களாக மாற்றி உரச்செலவைக் குறைத்து சாகுபடி மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

கிரீடு வேளாண் அறிவியல் மைய விஞ்ஞானிகள் ராஜ்கலா, திருமலைவாசன் மற்றும் காா்த்திக் ஆகியோா் கலந்து கொண்டு, மண் ஆய்வு முடிவுகளின்படி உரமிடுதல் தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கினா். ஏற்பாடுகளை வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் மீனாட்சி, உதவி தொழில் நுட்ப மேலாளா்கள் வாசுகி, சுந்தரமூா்த்தி மற்றும் வேளாண் அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.