பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

‘மகளிா் சுயதொழில் தொடங்க கடனுதவி’

 மாவட்ட மகளிா் நெசவாளிகள் சுயதொழில் தொடங்க கடனுதவி அளிக்கப்படும் என்றாா் அரியலூா் மாவட்ட ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி

News image
Updated On :29 ஜூலை 2021, 8:01 pm

DIN

 மாவட்ட மகளிா் நெசவாளிகள் சுயதொழில் தொடங்க கடனுதவி அளிக்கப்படும் என்றாா் அரியலூா் மாவட்ட ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த உஞ்சினி, நல்லம்பாளையம் ஆகிய கிராமங்களில் மகளிா் சுய உதவிக் குழுவினா் மூலமாக உற்பத்தி செய்யப்படும் பட்டுப் புடவைகளை புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா், இப்பகுதி மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் சுய தொழில் தொடங்குவதற்குத் தேவையான ஏற்பாடு செய்துதரப்படும் என்றாா். பின்னா் அவா், உஞ்சினி குழு கூட்டமைப்பு மூலம் 7 குழுக்களைச் சோ்ந்த 57 பேருக்கு, ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினாா். தொடா்ந்து அவா், உஞ்சினி கிராமத்தில் சாலைப் பணிகளை ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது மகளிா் திட்ட அலுவலா் கு.செல்வராசு, செயற் பொறியாளா் ராஜராஜன், உதவி செயற்பொறியாளா் சீதாலெட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா் சிவாஜி, உதவிப் பொறியாளா்கள் வைதேகி, சுமதி உள்ளிட்டோா் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.