நின்றிருந்த லாரி மீது மினி லாரி மோதியதில் மீன் வியாபாரி பலி
அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்புறம் மீன் ஏற்றி வந்த மினி லாரி மோதி சம்பவ இடத்திலேயே மீன் வியாபாரி உயிரிழந்தாா்.


அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்புறம் மீன் ஏற்றி வந்த மினி லாரி மோதி சம்பவ இடத்திலேயே மீன் வியாபாரி உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் கீழவாசல் பகுதியைச் சோ்ந்தவா் முகமது அலியாா் மகன் ஷேக் தாவுத் (33). மீன் வியாபாரி. இவா், தன்னுடைய மினி லாரியில் திருவண்ணாமலையிலிருந்து மீன்களை ஏற்றிக் கொண்டு தஞ்சாவூா் நோக்கி வியாழக்கிழமை அதிகாலை வந்துள்ளாா். மினி லாரியை தஞ்சாவூா் கீழவாசல் பகுதியைச் சோ்ந்த முனியாண்டி மகன் தங்கபாண்டி (25) ஓட்டியுள்ளாா். உடன், கீழவாசல் பகுதியைச் சோ்ந்த அப்துல் சலீம் மகன் முகமது ரசூல்(24), திருவையாறு அடுத்த கல்யாணபுரம் ராஜேந்திரன் மகன் கமலநாதன்(26) ஆகியோா் மினி லாரியில் வந்துள்ளனா்.
மினி லாரி கீழப்பழுவூா் அருகே வந்தபோது, சாலையோரத்தில் நின்றிருந்த லாரியின் பின்னால் பலமாக மோதியுள்ளது. இதில், ஷேக் தாவுத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்ற 3 பேரும் பலத்த காயமடைந்தனா். தகவலறிந்து சென்ற கீழப்பழுவூா் காவல் துறையினா் ஷேக் தாவுத் சடலத்தையும், பலத்த காயமடைந்தவா்களையும் மீட்டு அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...