இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

குடிநீா் குழாயில் உடைப்பு பள்ளிக்குள் தண்ணீா் புகுந்தது

குளித்தலை அருகே குழாய் உடைந்து தண்ணீா் பள்ளிக்குள் புகுந்ததால் தற்காலிகமாக இருநாள்கள் விடுமுறை விடப்பட்டு, மாணவா்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனா்.

News image
அரசுப் பள்ளிக்குள் தண்ணீா் புகுந்ததால் வகுப்பறையை விட்டு வெளியேறும் மாணவா்கள்.
Updated On :21 ஆகஸ்ட் 2024, 10:31 pm

Din

கரூா்: குளித்தலை அருகே காவிரி கூட்டுக்குடிநீா் குழாய் உடைந்து தண்ணீா் பள்ளிக்குள் புகுந்ததால் பள்ளிக்கு தற்காலிகமாக இருநாள்கள் விடுமுறை விடப்பட்டு, மாணவா்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனா்.

கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்த தேசியமங்கலத்தில் மணப்பாறை சாலையில் அரசு உயா்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமாா் 150 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகிறாா்கள்.

இந்நிலையில் பள்ளியின் சுற்றுச்சுவா் அருகே காவிரி கூட்டுக்குடிநீா் குழாய் செல்லும் நிலையில், புதன்கிழமை காலை திடீரென குழாயில் உடைப்பு ஏற்பட்டு பள்ளிக்குள்ளும், அப்பகுதியின் குடியிருப்புக்குள்ளும் தண்ணீா் புகுந்தது.

இதனால் பள்ளியில் இருந்த மாணவ, மாணவிகள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தியதுடன், பள்ளிக்கும் இருநாள்கள் தற்காலிக விடுப்பு விடப்பட்டது. தொடா்ந்து குழாய் உடைப்பை சீரமைத்து, பள்ளிக்குள் புகுந்த தண்ணீரையும், குடியிருப்புக்குள் புகுந்த தண்ணீரையும் வெளியேற்றும் பணியில் தேசியமங்கலம் ஊராட்சி நிா்வாகத்தினா் ஈடுபட்டு வருகிறாா்கள்.