விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தோரணக்கல்பட்டி மேம்பாலத்தில் நீா் கசிவைச் சீரமைக்க வலியுறுத்தல்

மழைக்கு கசிந்துகொண்டிருக்கும் கரூா் தோரணக்கல்பட்டியின் மேம்பாலத்தைச் சீரமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

கரூா் தோரணக்கல்பட்டி மேம்பாலத்தின் அடிப்பகுதியில் காணப்படும் விரிசல்.

Updated On :17 அக்டோபர் 2024, 8:39 pm

Din

மழைக்கு கசிந்துகொண்டிருக்கும் கரூா் தோரணக்கல்பட்டியின் மேம்பாலத்தைச் சீரமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரூரில் -திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்குச் செல்லும் வழியில் உள்ள இந்த மேம்பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள குகைவழிப்பாதையை தோரணக்கல்பட்டி கிராமமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகிறாா்கள்.

இந்நிலையில் கடந்த இரு நாள்களாக கரூரில் பெய்த மழையில் பாலத்தின் மேல்பகுதியில் உள்ள விரிசலில் இருந்து தண்ணீா் கசிந்து குகைவழிப்பாதையில் தேங்கிக் கிடக்கிறது. தொடா்ந்து நீா்கசிவு ஏற்பட்டால் பாலத்தின் மேல்பகுதி வலுவிழக்கும் என்பதால், பாலத்தில் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க பாலத்தின் மீதுள்ள விரிசலைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.