அடிப்படை வசதி கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராமமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றியம், இனுங்கூா் ஊராட்சிக்குள்பட்ட வைரபுரியில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு குடிநீா், கழிவுநீா்வடிகால், பொதுக்கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் இதுவரை செய்து தரப்படவில்லையாம்.
இதுதொடா்பாக இனுங்கூா் ஊராட்சி அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் போன்ற இடங்களில் பலமுறை அப்பகுதியினா் கோரிக்கை மனு கொடுத்தும் பலனில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த வைரபுரி கிராமமக்கள் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் தலைமையில், குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த அலுவலா்கள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது விரைவில் அடிப்படை வசதிகள் செய்துதரப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, கிராமமக்கள் கலைந்து சென்றனா்.

