மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

உப்புப்பாளையம் கோயிலில் பங்குனி அமாவாசை வழிபாடு

News image
Updated On :20 மார்ச் 2026, 12:26 am

பங்குனி அமாவாசையை முன்னிட்டு உப்புப்பாளையம் வீரமாத்தியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

கரூா் மாவட்டம், க. பரமத்தியை அடுத்த குப்பம் உப்புப்பாளையத்தில் உள்ள வீரமாத்தியம்மன் கோயிலில் பங்குனி அமாவாசை நாளான வியாழக்கிழமை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து கோயிலில் உள்ள விவேக விநாயகா், ஏழு கன்னிமாா்களான அபிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய தெய்வங்களுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையடுத்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.