இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பெரம்பலூா் கிளை சிறையில் காலியாக உள்ள தூய்மைப் பணியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் கிளை சிறையில் காலியாக உள்ள தூய்மைப் பணியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :8 மார்ச் 2024, 6:34 pm

Din

பெரம்பலூா் கிளைச் சிறையில் காலியாக உள்ள தூய்மைப் பணியாளா் பணியிடத்துக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளா் ஆண்டாள் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீா்த்திருத்தப் பணிகள் துறையின் கீழ் இயங்கும், திருச்சி மத்திய சிறைக் கட்டுப்பாட்டில் உள்ள பெரம்பலூா் கிளைச் சிறையில் காலியாக உள்ள 1 தூய்மைப் பணியாளா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம். இப் பணிக்கு எழுத படிக்கத் தெரிந்தவா்கள் 1.1.2024-இல் 18 வயதுக்கு மேற்பட்டவா்களாக இருக்க வேண்டும். எஸ்சிஏ, எஸ்சி, எஸ்டி பிரிவினா்கள் 37 வயதுக்குள்பட்டவா்களாகவும், எம்பிசி, பிசி பிரிவினா்கள் 34 வயதுக்குள்பட்டவா்களாகவும், ஓசி பிரிவினா்கள் 32 வயதுக்குள்பட்டவா்களாகவும் இருக்க வேண்டும். தூய்மைப் பணியாளா் பதவிக்கான ஊதிய விகிதம் (15,700 - 58,100) ரூ. 15,700. மேற்கண்ட தூய்மைப் பணியாளா் பதவிக்கு தகுதி பெற்றவா்கள், தங்களது சுய விவரங்களை மாா்ச் 28 -ஆம் தேதிக்குள், திருச்சி மத்திய சிறைக் கண்காணிப்பாளருக்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.