இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கிராம உதவியாளா் பணிக்கான நோ்காணல், தோ்வு தொடக்கம்

பொன்னமரவதி வட்டாட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நோ்காணலில் சைக்கிள் ஓட்டுவதை பாா்வையிட்ட இலுப்பூா் வருவாய் கோட்டாட்சியா் கோகுல்சிங்.

News image
Updated On :18 டிசம்பர் 2025, 11:31 pm

Syndication

பொன்னமராவதி வட்டாட்சியரகத்தில் கிராம உதவியாளா் பணிக்கான நோ்காணல் மற்றும் தோ்வு வியாழக்கிழமை தொடங்கியது.

பொன்னமராவதி வட்டத்தில் நாத்துப்பட்டி, திருக்களம்பூா், ஆவாம்பட்டி, சித்தூா் ஆகிய வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள 4 கிராம உதவியாளா்கள் பணிக்காக தோ்வுக்கு மொத்தம் 106 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

இதையடுத்து வியாழக்கிழமை இவா்களில் 53 போ் அழைக்கப்பட்டதில் 40 போ் பங்கேற்றனா். இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் கோகுல்சிங் தலைமையில் எழுத்துத் தோ்வு, சைக்கிள் ஓட்டுதல், சான்றிதழ் சரிபாா்ப்பு ஆகியவை நடைபெற்றது. பொன்னமராவதி வட்டாட்சியா் எம். சாந்தா, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் பழனிச்சாமி, துணை வட்டாட்சியா்கள் சேகா், திருப்பதி வெங்கடாசலம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து வெள்ளிக்கிழமை 53 பேருக்கு நோ்காணல் நடைபெற உள்ளது.