கீழவெண்மணி நினைவுநாள் கூட்டம்

பேராவூரணி அண்ணா சிலை அருகே தமிழக மக்கள் புரட்சிக் கழகம் ஒருங்கிணைப்பில் பல்வேறு இயக்கங்கள் சார்பில் கீழ வெண்மணி 
Updated on
1 min read

பேராவூரணி அண்ணா சிலை அருகே தமிழக மக்கள் புரட்சிக் கழகம் ஒருங்கிணைப்பில் பல்வேறு இயக்கங்கள் சார்பில் கீழ வெண்மணி தியாகிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தும் வீரவணக்கக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்துக்கு வீரக்குடி ராசா தலைமை வகித்தார். தமிழின உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஆறு.நீலகண்டன், தமிழ் வழி கல்வி இயக்க பொறுப்பாளர் சின்னப்பத் தமிழர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மதிமுக பொறுப்பாளர் வ.பாலசுப்பிரமணியன், கண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் சித்ரவேலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேலுச்சாமி, மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், தேமுதிக மருத்துவர் சிவபெருமாள், தி.வி.க. சித.திருவேங்கடம், கா.கலைச்செல்வன், கண்ணன் சாமானிய சகாக்கள் சங்கத்தின் சமந்தா, மனித நேய ஜனநாயக கட்சியின் அப்துல் சலாம் ஆகியோர் பங்கேற்று, பேசினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com