காவலர் பணிக்குத் தேர்வான 205 பேருக்கு பயிற்சி தொடக்கம்

காவலர் பணிக்குத் தேர்வான 205 பேருக்கு தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் 7 மாத கால அடிப்படைப் பயிற்சி புதன்கிழமை தொடங்கியது.
Updated on
1 min read

காவலர் பணிக்குத் தேர்வான 205 பேருக்கு தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் 7 மாத கால அடிப்படைப் பயிற்சி புதன்கிழமை தொடங்கியது.
தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வுக் குழுமம் சார்பில் இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு 2017, மே 21-ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்றது.
இதேபோல, தஞ்சாவூர் மாவட்டத்தில் 12 மையங்களில் நடைபெற்ற எழுத்துத் தேர்வில் 10,000-க்கும் அதிகமானோர் எழுதினர். இதில், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜூலை 27-ம் தேதி முதல் ஆக. 1-ம் தேதி வரை உடற் திறன் தேர்வும், மருத்துவப் பரிசோதனையும் நடத்தப்பட்டது. இதன் மூலம் 205 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு 7 மாத கால காவலர் அடிப்படை பயிற்சி தஞ்சாவூர் ஆயுதப் படை மைதானத்தில் புதன்கிழமை தொடங்கியது. இதை தொடங்கி வைத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி. செந்தில்குமார் அறிவுரை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com