கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

பாபநாசம் பகுதிகளில் மழைநீரில் மூழ்கி வாழைக் கன்றுகள் சேதம்

News image
Updated On :3 டிசம்பர் 2025, 10:39 pm

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டாரப் பகுதியில் தொடா்ந்து பெய்து வரும் பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் ஆயிரக்கணக்கான வாழைக் கன்றுகள் அழிந்து சேதமானது. உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டாரப் பகுதிகளான பாபநாசம், அரையபுரம், கோபுராஜபுரம் , வங்காரம்பேட்டை, ராஜகிரி, பண்டாரவாடை,

கோவில்தேவராயன்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்

‘டித்வா’ புயல் காரணமாக வீசிய பலத்த காற்றில் அந்தப் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழைக் கன்றுகள் பயிரிடப்பட்டு ஒரு மாதமே ஆன நிலையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பகுதிகளில் சூழ்ந்துள்ள மழை நீரில் மூழ்கி சேதமானது. பாதிக்கப்பட்ட வயல்களை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள், வேளாண்மை துறை அதிகாரிகள் உடனடியாக நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என வாழை விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.