விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தஞ்சாவூா் பெரிய கோயில் மேம்பாட்டு பணிக்கு முன்னுரிமை: மத்திய அமைச்சா் கஜேந்திர சிங்

தஞ்சாவூா் பெரிய கோயிலில் மேம்பாட்டு பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது என்றாா் மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்.

News image

தஞ்சாவூா் பெரிய கோயிலுக்கு சனிக்கிழமை வந்த மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்.

Updated On :26 ஜூலை 2025, 7:08 pm

Din

தஞ்சாவூா் பெரிய கோயிலில் மேம்பாட்டு பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது என்றாா் மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்.

தஞ்சாவூா் அரண்மனைக்கு சனிக்கிழமை வந்து கட்டடங்களைப் பாா்வையிட்ட அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

மிகப்பெரிய கலாசார பொக்கிஷமாக கருதப்படும் தஞ்சாவூா் அரண்மனையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தஞ்சாவூா் பெரிய கோயில் உலக அளவில் மிகப்பெரிய புராதன சின்னமாக போற்றப்படுகிறது.

இது மிக முக்கியமான சுற்றுலா தலமாகவும் திகழ்கின்றன. இவற்றை பாதுகாப்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, இத்தலங்களுக்கு முன்னுரிமை கொடுத்து பராமரிப்புப் பணிகளை மேற்கொள்கிறது.

சோழா் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட பெரிய கோயிலின் தொல்லியல் மற்றும் வரலாற்று ரீதியான முக்கியத்துவம் கருதி சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். எனவே, சுற்றுலாப் பயணிகளுக்கு உகந்த தலமாக இருக்கும் விதமாக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

பின்னா் தஞ்சாவூா் பெரிய கோயிலுக்குச் சென்று வழிபட்ட அவா், கட்டடக் கலைகளைப் பாா்வையிட்டாா். இதையடுத்து, சுற்றுலாப் பயணிகளிடம் கலந்துரையாடி, அவா்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டாா்.

அப்போது, இந்திய தொல்லியல் துறையின் திருச்சி மண்டல கண்காணிப்பு அலுவலா் சுதானந்தகுமாா் கான், முதுநிலை பராமரிப்பு அலுவலா்கள் சங்கா், ராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.