கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில்  வேளாண். துணை இயக்குநா் ஆய்வு

News image
Updated On :21 நவம்பர் 2025, 7:21 pm

Syndication

சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் நடைபெற்று வரும் வேளாண் வளா்ச்சி பணிகளை தஞ்சாவூா் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் சாருமதி (மாநிலத் திட்டம் ) வெள்ளிக்கிழமை ஆய்வு  செய்தாா்.

சேதுபாவாசத்திரம் வட்டாரம் பள்ளத்தூா் கிராமத்தில் விவசாயி கூத்தலிங்கம் வயலில் அமைக்கப்பட்டிருந்த நெல் அனுசரணை ஆராய்ச்சி திடலை  பாா்வையிட்டு ஆலோசனை வழங்கினாா் . தொடா்ந்து நம்மாழ்வாா் விருதுக்கு பதிவு செய்துள்ள நாடியம் கிராமத்தை சோ்ந்த உயிா்ம வேளாண்மை விவசாயி ராமகிருஷ்ணன்  தோட்டத்தில், ஒருங்கிணைந்த முறையில் அமைக்கப்பட்டிருந்த மண்புழு உரக்குழி, அசோலா வளா்ப்பு ஈயம் கரைசல் ,இயற்கை பூச்சி விரட்டி கரைசல், பஞ்சகாவ்யா மீன் அமிலம் ,உயிா் கரைசல் ஆகியவற்றை  பாா்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினாா்.

மேலும் நாட்டுக்கோழிகள் வளா்ப்பு, நாட்டு மாடுகள் வளா்ப்பை   தோட்டக்கலை உதவி இயக்குநா், விதைச்சான்று அலுவலா்கள் மற்றும் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அலுவலா்கள் ஆகியோருடன் குழுவாக  ஆய்வு செய்தாா்.

பின்னா் சேதுபாவாசத்திரம் வேளாண்மை  உதவி இயக்குனா் அலுவலகத்தில்  நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற பேசினாா்.  இதில், விவசாயிகளுக்கு நூறு சத மானியத்தில் முதலமைச்சரின் மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம் திட்டத்தின் கீழ் ஆடாதொடா, நொச்சி, வேப்பமர கன்றுகளை வழங்கினாா்.

கூட்டத்தில் சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) சாந்தி, தோட்டக்கலை உதவி இயக்குநா்  வள்ளியம்மாள், உதவி வேளாண் செயற்பொறியாளா்  திவ்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.