தையல் இயந்திரம் பெற பதிவு செய்ய அழைப்பு

தையல் இயந்திரம் பெறாத முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண்கள் மற்றும் திருமணமாகாத மகள்கள், விலையில்லா தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்.
Published on

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தையல் இயந்திரம் பெறாத முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண்கள் மற்றும் திருமணமாகாத மகள்கள், விலையில்லா தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மத்திய, மாநில அரசு மற்றும் அரசு சாா்ந்த நிறுவனங்களில் தையல் பயிற்சி முடித்து, உரிய சான்று பெற்று விலையில்லா தையல் இயந்திரம் பெறாத முன்னாள் படைவீரா்களின் மனைவி, கைம்பெண்கள், திருமணமாகாத மகள்கள்தங்கள் பெயரை உரிய சான்றுகளுடன் விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை இம்மாதம் 20-ஆம் தேதிக்குள் அணுகி, பதிவு செய்து கொண்டு பயன்பெறலாம் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com