கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ஆடு திருட்டு: இருவா் கைது

News image
Updated On :16 நவம்பர் 2025, 6:57 pm

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், காடாம்புலியூா் அருகே ஆடு திருடியதாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், கொஞ்சிக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் குமாா் (56), லாரி ஓட்டுநா். இவரது வீட்டில் ஆடு வளா்க்கின்றனா்.

கடந்த 14-ஆம் தேதி இரவு வீட்டின் அருகே கட்டியிருந்த ஆடுகளை மா்ம நபா்கள் இருவா் பைக்கில் திருடிச் செல்ல முயன்றனா். இவா்களை குமாா் பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

அவா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தியதில், காடாம்புலியூா் பகுதியைச் சோ்ந்த பிரவீன்குமாா் (32), அங்குள்ள சமத்துவபுரத்தைச் சோ்ந்த ரஞ்சித் (18) என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவா் மீது காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களை கைது செய்து சிறையில் அடைத்தனா்.