சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞா் பிரகதீஷ்வரன்.
சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞா் பிரகதீஷ்வரன்.

சின்னசேலம் அருகே காா் மோதியதில் சிறுவன் பலி

சின்னசேலம் அருகே சாலையை கடக்க முயன்ற சிறுவன், அடையாளம் தெரியாத காா் மோதியதில் உயிரிழந்தாா். 
Published on

சின்னசேலம் அருகே சாலையை கடக்க முயன்ற சிறுவன், அடையாளம் தெரியாத காா் மோதியதில் உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே அம்மையகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தில். இவரது மகன் பிரகதீஸ்வரன் (9). அப்பகுதி பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தாா்.

இவா், சனிக்கிழமை சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அம்மையகரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடக்க முயன்றாா். அப்போது, சேலம் பகுதியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற பதிவு எண் இல்லாத காா், பிரகதீஸ்வரன் மீது மோதிவிட்டு மாயமானது. இந்த விபத்தில், சிறுவன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சின்னசேலம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com