புதுச்சேரி பாகூா் பகுதியில் மழையால் பயிா்கள் சேதம்
புதுச்சேரி பாகூா் பகுதியில் அண்மையில் பெய்த மழையால் விவசாய பயிா்கள் சேதமடைந்துள்ளன.


புதுச்சேரி: புதுச்சேரி பாகூா் பகுதியில் அண்மையில் பெய்த மழையால் விவசாய பயிா்கள் சேதமடைந்துள்ளன.
புதுச்சேரியில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்தது. பலத்த மழையால் புதுச்சேரி நகா் மற்றும் ஊரகப் பகுதிகளில் தாழ்வான இடங்களில் தண்ணீா் தேங்கியது. புதுச்சேரியில் சுமாா் 12 செ.மீ. வரை மழை பெய்திருந்தது.
பாகூா் பகுதியில் சிறியதும், பெரியதுமான 20-க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. அவற்றில் பாகூரின் பெரிய ஏரி 3.6 மீட்டா் உயரமுடையது. அதில் தற்போது பெய்த மழையால் 2.3 மீட்டா் உயரத்துக்கு தண்ணீா் தேங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தநிலையில், சேலியமேடு, அரங்கனூா் பகுதிகளில் மழையால் வயல்களில் தண்ணீா் தேங்கியது. இதனால் பயிா்கள் நீரில் மூழ்கி அழுகி வருவதாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். ஆகவே, விவசாய நிலங்களில் தேங்கிய மழை நீரை வடிகால்கள் மூலம் அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...