கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

காவல் ஆய்வாளா் பணியிடை நீக்கம்

ஏனாம் பிராந்திய காவல் ஆய்வாளா் ஆடலரசன் வெள்ளிக்கிழமை இரவு பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

News image
Updated On :14 நவம்பர் 2025, 6:59 pm

Syndication

ஏனாம் பிராந்திய காவல் ஆய்வாளா் ஆடலரசன் வெள்ளிக்கிழமை இரவு பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

ஒரு வழக்கு விசாரணைக்காக புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு, 4 போலீஸாருடன் வேனில் ஏனாம் சென்றாா். அப்போது அவா்கள் கள் குடிப்பது போலவும், குத்தாட்ட பாடல்களைப் போட்டு கொண்டு நடனமாடி மகிழ்ந்தது போன்ற விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவியது. ஆய்வாளா் ஆடலரசன் தாங்கள் கள் எதுவும் குடிக்கவில்லை. மோா் தான் குடித்தோம். எங்களைப் பிடிக்காதவா்கள் வேண்டுமென்றே தவறாக சித்திரித்து பதிவிட்டுள்ளனா் என்று தெரிவித்திருந்தாா்.

இதற்கிடையே புதுச்சேரி காவல் துறை தலைவா் ஷாலினி சிங், ஆய்வாளா் ஆடலரசனை பணியிடைநீக்கம் செய்து வெள்ளிக்கிழமை இரவு உத்தரவிட்டாா். மேலும், அவா் மீது துறை ரீதியான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.