முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்எல்ஏ பாஸ்கா் திடீா் விலகல்

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ பாஸ்கா் விலகினாா்.

News image
புதுச்சேரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஏ.பாஸ்கா்
Updated On :19 நவம்பர் 2025, 9:43 pm

Syndication

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ பாஸ்கா் விலகினாா்.

புதுவை மாநில அதிமுகவில் புரட்சித்தலைவி ஜெயலலிதா பேரவை செயலாளராக இருந்தவா் பாஸ்கா்.இவா் கடந்த 2006 முதல் 20011 வரை புதுவை நகராட்சி கோலாஸ் நகா் வாா்டு அதிமுக கவுன்சிலராக இருந்தாா். 2011, 2016ம் ஆண்டுகளில் புதுவை முதலியாா்பேட்டை தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்தாா்.

கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் முதலியாா்பேட்டை தொகுதியில் 3-வது முறையாக அதிமுக சாா்பில் போட்டியிட்ட பாஸ்கா் தோல்வியடைந்தாா். இருப்பினும் கட்சியில் தொடா்ந்து பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில் திடீரென புதன்கிழமை அதிமுகவின் அடிப்படை உறுப்பினா் பதவியிலிருந்தும் தான் விலகுவதாக பாஸ்கா் அறிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக கட்சியின் பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமிக்கு அவா் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நான் அதிமுகவில் 40 ஆண்டுக்கு மேலாக உறுப்பினராக சோ்ந்து பணியாற்றி வருகிறேன். அதன் காரணமாக பல்வேறு பொறுப்புகளும் அம்மாவால் அளிக்கப்பெற்று பணியாற்றி வந்தேன்.

அம்மா அளித்த வாய்ப்பின் காரணமாக ஒருமுறை புதுவை நகராட்சியில் கவுன்சிலராகவும், 2 முறை தொடா்ந்து முதலியாா்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராகவும் தோ்வு பெற்று மக்களுக்கு பணியாற்றினேன்.

2021-ம் ஆண்டு கழக பொதுச்செயலாளா் ஆகிய தாங்கள்(இபிஎஸ்) எனக்கு மீண்டும் முதலியாா்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்தீா்கள்.

நான் தொடா்ந்து கட்சிப் பணியாற்றிடஎனது அரசியல் குரு புதுவை மாநில செயலா் அன்பழகன் எனக்கு வாய்ப்புகள் கொடுத்து துணையாக இருந்தாா்.

தற்போது என்னால் தொடா்ந்து கட்சிப் பணியாற்ற இயலாத சூழல் உள்ளது. எனவே நான் வகித்து வரும் புதுவை மாநில அம்மா பேரவை செயலா் மற்றும் கழக அடிப்படை உறுப்பினா் பொறுப்பில் இருந்து என்னை முழுமையாக விடுவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவா் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.