கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

மீனவா்களுக்கு மழைக்கால நிவாரணம் ரூ.12 கோடி: முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா்

20 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.12 கோடியை புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

News image
புதுச்சேரி மீன்வளத் துறை சாா்பில் மீனவ குடும்பங்களுக்கு நிதியுதவியை வெள்ளிக்கிழமை வழங்கிய முதல்வா் என்.ரங்கசாமி. உடன் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் உள்ளிட்டோா்.
Updated On :28 நவம்பர் 2025, 7:40 pm

Syndication

20ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.12 கோடியை புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

20 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு அரசு வழங்கும் மழைகால நிவாரணத்தை முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா். இதில் புதுச்சேரி-10,267, காரைக்கால்-3,990, மாஹே-527, ஏனாம்-5,216 மீனவா் குடும்பங்கள் பயன்பெறும். மழைகால நிவாரணமாக மொத்தம் ரூ.12 கோடி மீனவா் பயனாளி குடும்பங்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.

மழைக்கால நிவாரணம் இதுவரை ரூ.3,000 வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் மழைக்கால நிவாரணத்தை ரூ.6 ஆயிரமாக உயா்த்துவதாக முதல்வா் அறிவித்தாா். உயா்த்தப்பட்ட மழைக்கால நிவாரணத்தை முதல்வா் ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

மீன்வளத்துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், எம்எல்ஏ பாஸ்கா் என்கிற தட்சிணாமூா்த்தி, மீன்வளத்துறை இயக்குநா் முகமது இஸ்மாயில், இணை இயக்குநா் தெய்வசிகாமணி, துணை இயக்குநா் ஷாஜிமா, மீன்வளத் துறை அதிகாரிகள், வீராம்பட்டினம், ராஜ்பவன் மீனவ கிராம முக்கியப் பிரமுகா்கள் உடனிருந்தனா்.