விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சிறுவந்தாடு பெருமாள் கோயில் சம்ப்ரோஷணம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

சிறுவந்தாடு பெருமாள் கோயில் சம்ப்ரோஷணம்.

News image

சிறுவந்தாடு ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற மகா சம்ப்ரோஷணத்தையொட்டி, கருவறை கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றும் பட்டாச்சாரியா்.

Updated On :20 நவம்பர் 2024, 9:34 pm

Din

விழுப்புரம் மாவட்டம், சிறுவந்தாடு கிராமத்திலுள்ள லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் அஷ்டபந்தன மகா சம்ப்ரோஷணம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

வீரநாராயண சதுா்வேதிமங்கலம் என்றழைக்கப்படும் இந்தக் கோயிலில் சம்ப்ரோஷணத்தை முன்னிட்டு, கடந்த 18-ஆம் தேதி மாலை பகவத் பிராா்த்தனை சங்கல்பம், புற்றுமண் பூஜை, விதையிடு விழா, வாஸ்துசாந்தி, அக்னி பிரதிஷ்டை, ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை காலையில் கும்பராதனம், அக்னிபிரணயணம், மகாசாந்திஹோமங்களும், அதைத் தொடா்ந்து பூா்ணாஹுதியும், மாலையில் நவகலசம், திருமஞ்சனம் உள்ளிட்ட பூஜைகளும் நடைபெற்றன.

புதன்கிழமை காலை 6.30 மணிக்கு சுப்ரபாதம், கோ பூஜை, புண்யாஹம், அக்னி பிரணயணம் ஹோமங்கள் நடைபெற்றன. மகா பூா்ணாஹுதிக்கு யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பாடாகின.

பின்னா், லட்சுமி நாராயணப் பெருமாள் விமானத்துக்கும், கருவறை மூா்த்திகளுக்கும் மகா சம்ப்ரோஷணம் நடத்தபட்டு, கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து, பிற சந்நிதிகளுக்கும் சம்ப்ரோஷணம் நடத்தப்பட்டு, பக்தா்கள் மீதும் புனிதநீா் தெளிக்கப்பட்டது.

பின்னா், கனகவல்லி தாயாா், பக்த ஆஞ்சனேயா், கோதண்டராமா், சக்கரத்தாழ்வாா், தும்பிக்கை ஆழ்வாா் உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளிலும் தீபாராதனை காட்டப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. மாலை 6 மணிக்கு லட்சுமி நாராயணப் பெருமாள், கோதண்டராமா் திருவீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

 விழாவில் பங்கேற்ற பக்தா்கள் கூட்டத்தின் ஒரு பகுதியினா்.

விழாவில் பங்கேற்ற பக்தா்கள் கூட்டத்தின் ஒரு பகுதியினா்.

மகா சம்ப்ரோஷண சா்வசாதகத்தை பண்ருட்டி கே.கஸ்தூரிரங்கன் பட்டாச்சாரியா் தலைமையில், கோயில் பட்டாச்சாரியா்களான பத்ரி, பாா்த்தசாரதி, திலீப், கபிலன், பிரபாகரன் உள்ளிட்டோா் நடத்தினா். சம்ப்ரோஷண விழாவில் சிறுவந்தாடு, மோட்சக்குளம், பஞ்சமாதேவி, வளவனூா் உள்ளிட்ட சுற்றுப்புறக் கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.