முகப்பு
பெங்களூரு

கோடை அறிவியல் கருத்தரங்கில் மாணவர்கள் பங்கேற்கலாம்

பெங்களூர் ஜவஹர்லால் நேரு கோளரங்கத்தில் மே 21-ம் தேதி தொடங்க உள்ள கோடை அறிவியல் கருத்தரங்கத்தில் மாணவர்கள் பங்கேற்கலாம்.

Updated On : 12 மே 2013, 8:11 am IST
பகிர்:

பெங்களூர் ஜவஹர்லால் நேரு கோளரங்கத்தில் மே 21-ம் தேதி தொடங்க உள்ள கோடை அறிவியல் கருத்தரங்கத்தில் மாணவர்கள் பங்கேற்கலாம்.
ஜவஹர்லால் நேரு கோளரங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்கும் விதமாக, இக்கோளரங்கம் சார்பில், கோடை அறிவியல் கருத்தரங்கை நடத்த உள்ளது. இந்த கருத்தரங்கம், மே 21-ம் தேதி தொடங்கி, ஜூன் 1-ம் தேதி வரை, காலை 10.30 முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். இதில் பியூசி, பி.எஸ்சி மாணவர்கள் பங்கேற்கலாம். இந்த கருத்தரங்கில், பல்வேறு முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களைச் சார்ந்த வல்லுநர்கள் பங்கேற்று, கருத்துரை வழங்க உள்ளனர். இதில் பங்கேற்க விரும்புவோர், தங்கள் பெயரை முன்பதிவுசெய்துக்கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 080- 22379725 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டோ, www.taralaya.org என்ற இணையதளத்தில் பார்த்தோ தெரிந்துகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.