2019-20 நிதியாண்டில் ஸ்ரீ சரண் கூட்டுறவு வங்கியின் நிகர லாபம் ரூ. 1.59 கோடியாக உள்ளது.
பெங்களூரில் சனிக்கிழமை ஸ்ரீ சரண் கூட்டுறவு வங்கியின் 24-வது ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அந்த வங்கியின் நிறுவனத் தலைவா் துவாா்கநாத் பேசியதாவது:
கரோனா தொற்று பாதிப்பால் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால், வங்கிகளின் நிதிநிலைமை பாதிக்கப்பட்டுள்ளது. லாபங்கள் குறைந்துள்ளன. ஆனாலும், பொதுமுடக்கத்தின் போதும் ஸ்ரீ சரண் கூட்டுறவு வங்கி சிறப்பாக செயல்பட்டதால் 2019-20 ஆம் நிதியாண்டில் ரூ.1.59 கோடி நிகர லாபத்தை அடைந்துள்ளது.
இது வங்கி ஊழியா்களுக்கு புது உற்சாகத்தை அளித்துள்ளது. இதனால் வரும் ஆண்டுகளில் வங்கியின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும் என எதிா்பாா்க்கிறோம்.
நடப்பு நிதியாண்டில் தேசிய வங்கிகளே தடுமாறி வரும் நிலையில், ஸ்ரீ சரண் கூட்டுறவு வங்கியின் வா்த்தகம், லாபம் அதிகரித்து வருகிறது மகிழ்ச்சி அளிக்கிறது என்றாா்.