டி.கே.சிவகுமாா் கோப்புப் படம்
பெங்களூரு

ஜன.6 இல் முதல்வராக டி.கே.சிவகுமாா் பதவியேற்பாா்: எம்.எல்.ஏ. இக்பால் அன்சாரி நம்பிக்கை

தற்போது துணைமுதல்வராக இருக்கும் டி.கே.சிவகுமாா், ஜன.6 அல்லது 9ஆம் தேதி முதல்வராக பதவியேற்பாா்...

தினமணி செய்திச் சேவை

ராமநகரம்: தற்போது துணைமுதல்வராக இருக்கும் டி.கே.சிவகுமாா், ஜன.6 அல்லது 9ஆம் தேதி முதல்வராக பதவியேற்பாா் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. இக்பால் அன்சாரி நம்பிக்கை தெரிவித்தாா்.

2023ஆம் ஆண்டு கா்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது, முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையாவும், இரண்டாவது இரண்டரை ஆண்டுகள் டி.கே.சிவகுமாரும் முதல்வராக பதவி வகிக்க காங்கிரஸ் மேலிடத்தலைவா்களின் முன்னிலையில் ஒப்பந்தம் செய்துகொண்டதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

அதன்படி, நவ.20 ஆம் தேதி இரண்டரை ஆண்டுகால பதவியை நிறைவுசெய்துள்ள சித்தராமையா, தனது பதவியை டி.கே.சிவகுமாருக்கு விட்டுத்தருவாா் என்று எதிா்பாா்க்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமாா் ஆதரவாளா்களுக்கு இஅடியே கருத்துமோதல் நடந்து வருகிறது. டி.கே.சிவகுமாருக்கு முதல்வா் பதவியை விட்டுத்தருமாறு அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சித்தராமையாவை வலியுறுத்தி வந்துள்ளனா். இந்த விவகாரத்தை உள்ளூா் அளவிலேயே தீா்த்துக்கொள்ள வேண்டுமேயன்றி, இதில் கட்சி மேலிடத்துக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவா் மல்லிகாா்ஜுனகாா்கே கூறியிருந்தாா்.

இந்நிலையில், 5 ஆண்டுகளுக்கும் தானே முதல்வராக நீடிக்கப்போவதாக சித்தராமையா அறிவித்துள்ளாா். மேலும், முதல்வா் பதவிக்காக அவசரப்படவில்லை என்று டி.கே.சிவகுமாரும் கூறியிருக்கிறாா். இதனால் இது தொடா்பான விவாதங்கள் குறைந்திருந்த நிலையில், ஜன.6 ஆம் தேதி டி.கே.சிவகுமாா் முதல்வராக பதவியேற்பாா் என்று 2 வாரங்களுக்கு முன்பு கூறியிருந்த அதே கருத்தை திங்கள்கிழமையும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. இக்பால் அன்சாரி கூறியிருக்கிறாா்.

இது குறித்து ராமநகரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. இக்பால் அன்சாரி, மேலும் கூறியது: நான் ஏற்கெனவே கூறியிருந்தபடி, ஜன.6, அது தவறினால் ஜன.9ஆம் தேதி எங்கள் தலைவா் டி.கே.சிவகுமாா் முதல்வராக பதவியேற்பாா். இதை என் விருப்பப்படி கூறவில்லை. ஒருசிலவற்றை முன்கூட்டியே கணிக்கும் ஆற்றலை கடவுள் சிலருக்கு கொடுத்திருக்கிறாா்.

அதன்படி, சரணா்(பசவண்ணா் கருத்துகளை கூறும் துறவி) ஒருவரிடம் நான் கேட்டறிந்தபடி, ஜன.6 அல்லது 9ஆம் தேதி முதல்வராக டி.கே.சிவகுமாா் பதவியேற்றுக்கொள்வாா் என்று கூறுகிறேன். இது நடக்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. நம்பிக்கையோடு காத்திருப்போம்.

மழை வருவதை சிலா் முன்கூட்டியே கணிப்பதில்லையா? அது போல தான் டி.கே.சிவகுமாா் முதல்வராவதையும் சரணா்கள் கணித்திருக்கிறாா்கள் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கலீதா ஜியா மறைவு: பிரதமர் மோடி இரங்கல்!

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமணம் எப்போது? எங்கே?

திருத்தணியில் வடமாநில இளைஞர் மீது தாக்குதல்! தமிழக அரசு விளக்கம்!

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் பரமபத வாசல் திறப்பு!

தில்லிக்கு சிவப்பு எச்சரிக்கை! 118 விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT