கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்
பெங்களூரு : கர்நாடகத்தில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் புதன்கிழமை ( மே 20) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள நிலையில், போராட்டத்தில் கலந்துகொண்டால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட நிலுவையில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை அரசு சாலை போக்குவரத்துக் கழகங்கள் இழுத்தடித்து வருவதால் வரும் 20}ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்துக் கழகங்களின் அதிகாரிகள், ஊழியர்கள் கொண்ட கூட்டு நடவடிக்கைக் குழு அறிவித்துள்ளது. இதனால், அரசுப் பேருந்து சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அக்ரம் பாஷா எச்சரித்துள்ளார்.
Advertisement