உ.பி.யில் தனியார் நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் வன்முறை
உ.பி.யில் தனியார் நிறுவன ஊழியர்கள் போராட்டம் வன்முறையாக மாறியதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
உ.பி.யில் தனியார் நிறுவன ஊழியர்கள் போராட்டம் வன்முறையாக மாறியதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் நிறுவன ஊழியர்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டத்தின் போது, ஒருதரப்பினர் சொத்துக்களை சேதப்படுத்தியதோடு, கற்களை வீசி எறிந்தும், வாகனம் ஒன்றிற்கு தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் வாகனங்கள் சேதமடைந்ததோடு, பாதிக்கப்பட்ட தொழில்பேட்டை பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நிலைமை மோசமடைந்ததை தொடர்ந்து, அப்பகுதியில் நிலவும் பதற்றத்தை தணிக்கவும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் ஆயிரக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், மூத்த போலீஸ் மற்றும் நிர்வாக அதிகாரிகள் களத்தில் இருந்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
இதுகுறித்து போலீஸ் தரப்பில் வெளியான அறிக்கையில், "தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது மற்றும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்களுக்கு ஆலோசனை வழங்கி அமைதியை நிலைநாட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சட்டம் ஒழுங்கை பராமரிக்க தேவையான இடங்களில் மட்டும் குறைந்தபட்ச பலம் பயன்படுத்தப்படுகிறது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் இந்த போராட்டத்தால் நொய்டாவின் முக்கிய தொழில்பேட்டை பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
Protests by factory workers demanding a hike in wages turned violent in parts of Noida on Monday, with incidents of arson, vandalism and stone-pelting reported from Phase-2 and Sector 60 areas.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.