ஹாசன் மாவட்ட ஆட்சியராக ரன்தீப் பொறுப்பேற்பு
பணியிட மாற்றம் செய்த மாநில அரசின் உத்தரவை உறுதி செய்து மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டதையடுத்து, ஹாசன் மாவட்ட ஆட்சியராகயிருந்த
பணியிட மாற்றம் செய்த மாநில அரசின் உத்தரவை உறுதி செய்து மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டதையடுத்து, ஹாசன் மாவட்ட ஆட்சியராகயிருந்த ரோகிணி சிந்தூரி விடுவிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை ரன்தீப் பொறுப்பேற்றார்.
கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்தவர் ரோகிணி சிந்தூரி. அண்மையில் இவரை பணியிட மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டது.மைசூரு ஆட்சியராகப் பணியாற்றிய ரன்தீப்பை ஹாசன் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து ரோகிணி சிந்தூரி மத்திய நிர்வாக தீர்ப்பாயத்திடம் முறையிட்டார். இதையடுத்து, அரசின் உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டது. ஹாசன் மாவட்ட ஆட்சியராக ரோகிணி சிந்தூரி தொடர்ந்தார். இந்த நிலையில், மத்திய நிர்வாக தீர்பாயம், மாநில அரசின் உத்தரவை உறுதி செய்தது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை மாலை ஹாசன் மாவட்ட ஆட்சியராக ரன்தீப் பொறுப்பேற்றார்.