பெங்களூரு

சாலை விபத்தில் தொழிலாளி சாவு

DIN

சாலை தடுப்புச் சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தார்.
பெங்களூரு சிக்கலசந்திராவைச் சேர்ந்தவர் புருஷோத்தம்நாயுடு (36). கட்டடத் தொழிலாளியான இவர், செவ்வாய்க்கிழமை இரவு தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாராம். பனசங்கரி 6-வது ஸ்டேஜ் நைஸ்சாலை அருகே கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலைத்தடுப்புச்சுவரில் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த புருஷோத்தம்நாயுடு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். காயமடைந்த அவரது நண்பர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து குமாரசாமி லேஅவுட் போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT