முகப்பு
பெங்களூரு

லாரி மீது தனியார் பேருந்து மோதல்: 8 பேர் சாவு

சாலையோரம் நின்றிருந்த லாரி மீது தனியார் பேருந்து மோதியதில், குழந்தை உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர்.

Updated On : 22 மே, 2018 at 4:21 AM
பகிர்:

சாலையோரம் நின்றிருந்த லாரி மீது தனியார் பேருந்து மோதியதில், குழந்தை உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டம், சிரா மற்றும் பட்டநாயக்கனஹள்ளியைச் சேர்ந்தவர்கள், கடந்த 19-ஆம் தேதி தனியார் பேருந்தில் சிகந்தூர் செளடேஸ்வரிதேவி திருவிழாவுக்கு சென்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு சொந்த ஊருக்கு திரும்பினர். அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சிரா அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்றிந்த லாரி மீது மோதியது. இதில் 1 வயது குழந்தை உள்பட அனுஷா (7), ரத்னம்மா (38), சவிதா (21), சுமலதா (21), கிரிஜம்மா (50), சங்கர் (35), அஸ்வத்நாராயணா (40) ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 10 பேர், லேசான காயமடைந்த 9 பேர் சிகிச்சைக்காக தும்கூரு, சிரா, பெங்களூரு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திவ்யா கோபிநாத், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஷோபாராணி உள்ளிட்டோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இதுகுறித்து சிரா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.